follow the truth

follow the truth

March, 13, 2025
HomeTOP2விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் உதவி மையம்

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் உதவி மையம்

Published on

கேட்கும் திறன் குறைபாடு பார்வை குறைபாடு போன்ற விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காகவும் பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதற்கும் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு ஒருங்கிணைந்த உதவி மையம் ஒன்று போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

நேற்று (11) மாகும்புர பன்முக போக்குவரத்து மைய வளாகத்தில் இந்தச் சிறப்பு நிறுவுதல் மூலம் அவசர அறிவிப்பு எண் கேட்கும் திறன் குறைபாடுள்ள பயணிகளுக்கு தகவல் தொடர்பு வசதி மற்றும் தகவல்களைப் பெறுவதற்கான வசதி போன்ற பல சேவைகள் பயணிகளுக்குக் கிடைக்கும்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த உதவி மையத்தில் விசேட தேவையுடைய ஊழியர்கள் மட்டுமே சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வுடன் மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தின் இணையதளமும் வெளியிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இயலாமையுடைய நபர்கள் ஒன்றியத்தின் தலைவராக சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா...

நியாயமான சந்தையில் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள இலங்கைக்கு JICA மற்றும் JFTC ஆதரவு

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை...

பாடசாலை கிரிக்கெட் போட்டி – விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை

பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் போது விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக பதில்...