ஐந்து நகரங்களில் காற்றின் தரம் இன்று சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது.
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என, தேதிய கட்டட ஆராச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் அடுத்த 24 மணி நேரத்தில் சற்று ஆரோக்கியமற்ற நிலையிலிருந்து மிதமான நிலைக்கு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமான அளவில் பதிவாகியுள்ளது.