follow the truth

follow the truth

March, 5, 2025
Homeஉலகம்செர்பியா பாராளுமன்றில் களேபரம் - எதிர்கட்சியினர் புகைகுண்டுகளை வீசியதால் 3 உறுப்பினர்கள் காயம்

செர்பியா பாராளுமன்றில் களேபரம் – எதிர்கட்சியினர் புகைகுண்டுகளை வீசியதால் 3 உறுப்பினர்கள் காயம்

Published on

செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று( 04) கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த் து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் இராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரி விதிப்பு

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. இந்த புதிய வரி மார்ச் 10...

கனடா மற்றும் மெக்சிகோவிற்கு இன்று முதல் 25% வரி

மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (04) அமுலுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி...

அமெரிக்காவில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக அறிவிப்பு

ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார். ஃபெடரல் அரசு நிர்வாகம் மற்றும்...