follow the truth

follow the truth

March, 4, 2025
HomeTOP1மித்தெனிய முக்கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மித்தெனிய முக்கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Published on

மித்தெனிய முக்கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை மித்தெனிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 36 வயதுடைய
ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர் சந்தேக நபர்களுக்கு T-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 12 தோட்டாக்களை வழங்கியதாக முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முக்கொலை தொடர்பில் மித்தெனிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட எதிர்பார்ப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீண்டகால மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக அவர்களில் பெரும்பாலானவர்களை வலுவூட்டுவதை அமைச்சு நோக்கமாகக் கொண்டிருப்பதாக கிராமிய...

திருகோணமலையின் 24 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை...

வைத்தியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது

வைத்தியர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்வது...