இந்த நாட்டின் குடும்ப சுகாதார சேவையானது மக்களால் பாராட்டப்பட்டாலும், அது அரசால் அதே அளவிற்குப் பாராட்டப்படாத ஒரு சேவையாகும் என்றும், ஒரு அரசாங்கமாக, குடும்ப சுகாதார சேவைக்குக் கிடைக்காத மரியாதையை நாம் வழங்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அகில இலங்கை குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டிற்கான தேசிய சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ள குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் தேசிய மாநாடு என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு நேற்று (02) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அனைத்து குடிமக்களுக்கும் அழகான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக நாட்டில் சுகாதார சேவையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், “ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளுடன் புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு குடிமகனுக்கும் அழகான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
எதிர்கால சுகாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் குடிமக்களைக் கருத்தில் கொண்டும், சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டும் வகுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
வரலாற்றில் சில அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற முடியாதபோது, தங்கள் விசுவாசமான குழுக்களைப் பயன்படுத்தி பாதகமான நடவடிக்கை எடுத்ததை நினைவு கூர்ந்த அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்கள் நடக்காது என்றும், சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து தொழில்களின் தொழில்முறை உரிமைகளையும் பாதுகாக்க தனது அரசாங்கம் பாடுபடும் என்றும் கூறினார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது 130க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இருப்பதாகவும், அவற்றில் 53 இரண்டாம் நிலை மருத்துவமனைகள் மற்றும் 80 மூன்றாம் நிலை மருத்துவமனைகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகளை வழங்கும் 53 மருத்துவமனைகள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும், அந்த மருத்துவமனைகளின் வளங்களை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இரண்டாம் நிலைத் துறையில் உள்ள 80 மருத்துவமனைகள் மாகாண சபையால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும், அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அதிக பணம் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டாலும், அவை மக்களுக்கு அருகில் இல்லாவிட்டால், மக்களுக்கு சேவை சரியாகக் கிடைக்காது என்றும், மக்கள் இலகுவாக அணுககூடிய இடங்களில் ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக இந்த என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு பொறுப்பான ஒரு சுகாதார குழு தேவை என்று கூறினார்.
எந்தவொரு குடிமகனுக்கும் சிகிச்சை சேவைகள் மறுக்கப்படாது என்றும் கூறப்பட்டது. பொதுத்துறையில் மட்டும் ஒரு குடிமகன் ஆறு முறை சிகிச்சை பெறுகிறார் என்றும், நாட்டின் மக்கள் தொகை 20 மில்லியன் என்றும், ஆனால் வெளிநோயாளி சிகிச்சை பெறும் பொதுத்துறை நோயாளிகளின் எண்ணிக்கை 120 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது..
இதற்காக இன்னமும் மேம்பட்ட சுகாதார திட்டமிடல் அமைக்கவேண்டும்
உலகின் வளர்ந்த நாடுகள் மேம்பட்ட சுகாதார அமைப்பை நோக்கிச் செல்லும் முறை இது என்றும், நமது நாடும் அந்த முறையைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது என்றும் கூறப்பட்டது.