புதுக்கடை நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ சம்பவத்தில் நீதிமன்றத்துக்கு ரிவோல்வரை கொண்டுவந்த பெண்ணோடு தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு காவல் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி, நீர்கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவின் கீழ் நீதிமன்றப் பணியில் நியமிக்கப்பட்ட பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு குற்றப்பிரிவால் (CCD) இவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸ் அதிகாரி பாதெனியவைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் இஷாரா சேவ்வந்தி என்ற பெண்ணுடன் இந்த பொலிஸ் அதிகாரி தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொலிஸ் அதிகாரி CCDக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.