follow the truth

follow the truth

February, 21, 2025
Homeஉள்நாடுசஞ்சீவ கொலை சம்பவம் - ரிவோல்வர் கொண்டுவந்த பெண்ணுடன் தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி கைது

சஞ்சீவ கொலை சம்பவம் – ரிவோல்வர் கொண்டுவந்த பெண்ணுடன் தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி கைது

Published on

புதுக்கடை நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ சம்பவத்தில் நீதிமன்றத்துக்கு ரிவோல்வரை கொண்டுவந்த பெண்ணோடு தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு காவல் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி, நீர்கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவின் கீழ் நீதிமன்றப் பணியில் நியமிக்கப்பட்ட பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு குற்றப்பிரிவால் (CCD) இவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸ் அதிகாரி பாதெனியவைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் இஷாரா சேவ்வந்தி என்ற பெண்ணுடன் இந்த பொலிஸ் அதிகாரி தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொலிஸ் அதிகாரி CCDக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுக மேற்கு முனைய செயற்பாடுகள் பெப்ரவரி 26 ஆரம்பம்

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 26 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது...

பொலிதீன் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சூழல் பாதிப்பைத் தடுக்க புதிய திட்டம்

'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்துடன் இணைந்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பொலிதீன் பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் முழு...