நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக இந்நாட்களில் ஏற்றவாறு பாடசாலைகளில் மாணவர்களை எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு சுசாதார அமைச்சு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை கல்வி அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.
வெப்பமான நாட்களில், மாணவர்கள் வெளிப்புற விளையாட்டு மைதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பாடசாலை இடைவேளையின் போது வெளியில் அதிக சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவதையும், விளையாட்டு விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும்.
மதிய நேரத்தில் அதிக வெப்பநிலை நிலவும் போது, அத்தியாவசியமற்ற சூழ்நிலைகளில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்த்தல் (பாடசாலையிலும் வீட்டிலும்).
அதிக தண்ணீர் குடிக்கவும், சோர்வைப் போக்கவும் இரண்டு குறுகிய ஓய்வு நேரங்களை வழங்குவது சிறந்தது.
போன்ற முக்கிய பரிந்துரைகள் கடிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.