2025 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் 115,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 367,804 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 59,391 ஆகும்.
இந்த மாதத்தில் இந்தியா, ரஷ்யா பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.