follow the truth

follow the truth

February, 16, 2025
HomeTOP2சட்டப் பரீட்சையில் நாமல் காப்பி அடித்தாரா? சிஐடி விசாரணை ஆரம்பம்

சட்டப் பரீட்சையில் நாமல் காப்பி அடித்தாரா? சிஐடி விசாரணை ஆரம்பம்

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு சட்டவிரோதமாக தனது சட்டப் பட்டம் பெற்றதாகக் குற்றம் சாட்டி, “இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான சிட்டிசன் பவர்” என்ற அமைப்பு குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளது.

மேற்கண்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, நாமல் ராஜபக்ஷ சட்டப் பரீட்சையை குளிரூட்டப்பட்ட அறையில் எழுதியதாகவும், முன்கூட்டியே வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாகவும், இணைய வசதியுடன் கூடிய கணினி வழங்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினார்.

இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, இது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல தரப்பினர் ஏற்கனவே குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்.பி பைசலின் உறவினருக்கு விளக்கமறியல்

வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினர் எதிர்வரும் 17 ஆம் திகதி...

எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் உருண்டு விழும் அபாயம்

ராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​PHI கைது

ஹோட்டல் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு...