ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் பிரிவினால் தனக்கு எதிராக நடத்தப்பட்ட சட்டவிரோத விசாரணைகளால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பாகவே உயர் நீதிமன்றம் மேற்படி அனுமதியை வழங்கியுள்ளது.
நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, குமுதுனி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இன்று (13) இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதையடுத்து மனு விசாரணையை செப்டம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.