follow the truth

follow the truth

February, 12, 2025
HomeTOP1குவைத் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

குவைத் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

Published on

2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (11) இடம்பெற்றது.

தற்போது இலங்கையின் அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கான சாத்தியங்கள் விரிவடைந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துவது மற்றும் சந்தையை பன்முகப்படுத்துவது குறித்து இரு தரப்பும் கவனம் செலுத்தியதுடன், அதற்கான புதிய உத்திகளைக் கண்டுபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்கு குவைத் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவுக்கு நன்றி தெரிவித்தார்.

குவைத்தில் சுமார் 155,000 இலங்கைப் பணியாளர்கள் இருப்பதாகவும், அவர்களிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் வருமானமாக கிடைப்பதாகவும், இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைவிடப்பட்ட வேலைத் திட்டங்களை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை

கடந்த அரசாங்க காலத்தில் இடைநடுவே கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

எம்.பி அர்ச்சுனா தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணத்தில்...

கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறை ஊழியர் பணி நீக்கம்

கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை இன்று (12) பணி நீக்கம் செய்ய ரயில்...