follow the truth

follow the truth

February, 12, 2025
Homeஉள்நாடுஅமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க அக்தபத்திர மகோற்சவம் தொடர்பான கலந்துரையாடல்

அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க அக்தபத்திர மகோற்சவம் தொடர்பான கலந்துரையாடல்

Published on

அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(11) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை அமரபுர மகா பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவி தொடர்பான அக்தபத்திர மகோற்சவத்தை மார்ச் 10 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அக்தபத்திர மகோற்சவத்திற்கு அரசாங்கத்தினால் வழங்கக் கூடிய அனைத்து ஆதரவையும் வழங்குவதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன் போது தெரிவித்தார்.

இந்த அக்தபத்திர மகோற்சவத்திற்கு பங்களிக்கும் அரசு நிறுவனங்களுக்கு மகோற்சவம் தொடர்பான பணிகளைப் பகிர்ந்தளிப்பது குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைவிடப்பட்ட வேலைத் திட்டங்களை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை

கடந்த அரசாங்க காலத்தில் இடைநடுவே கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

எம்.பி அர்ச்சுனா தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணத்தில்...

கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறை ஊழியர் பணி நீக்கம்

கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை இன்று (12) பணி நீக்கம் செய்ய ரயில்...