குருநாகல், தொரயாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்துகளின் சேவைகளை இடைநிறுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவித்துள்ளது.
முறையான விசாரணைக்குப் பிறகு குறித்த அனுமதிப்பத்திரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குருநாகல் தோரயாய பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 34 பேர் காயமடைந்தனர்.
குறித்த பேருந்து மணிக்கு சுமார் 90 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.