முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு (Daisy Forrest) கடுவலை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெய்சி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் சந்தேக நபர் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் உத்தரவின் பேரிலேயே இந்த குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.