follow the truth

follow the truth

February, 11, 2025
Homeஉள்நாடுமின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீதும், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துகின்றனர்

மின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீதும், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துகின்றனர்

Published on

நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.

சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவையுள்ள காலங்களை நிர்வகிக்கத் தவறிய மோசமான நிர்வாகமும்தான் மின்தடைக்கான உண்மையான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்தடை தொடர்பிலான உண்மை நிலையை இது போன்ற தவறான தகவல்கள்மூலம் மறைக்க முடியாது என்றும், மின் துறையில் சீர்திருத்தங்கள்மூலம் மட்டுமே அதை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தகைய அமைப்பில் மாற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியமை தொடர்பான வழக்கு – 25ம் திகதி விசாரணைக்கு

கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியது தொடர்பான...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில்...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை நேற்றைய தினம்(10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில்...