பல ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் 6 ரயில் சேவைகளில் இது செயல்படுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை – பதுளை, பதுளை – கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை – தலைமன்னார் மற்றும் தலைமன்னார் – கொழும்பு கோட்டை இடையே இயங்கும் ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கைகளை மார்ச் 10 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யும் வசதிகளை நீக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.