யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மரணதண்டனைக்கு எதிராகக் குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று மூவரடங்கிய நீதியரசர் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி இந்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு நாளொன்றை ஒதுக்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.
அதன்படி உரிய மேன்முறையீட்டு மனுக்களை ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய நீதியரசர் ஆயம் உத்தரவிட்டது.