அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் திமுத் கருணாரத்ன தீர்மானித்துள்ள நிலையில், குறித்த போட்டியை பார்வையிடுவதற்கு சகல கிரிக்கெட் ரசிகர்களும் செல்ல வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் நாளை முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி திமுத் கருணாரத்னவின் 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும்.
இந்நிலையில் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் திமுத் கருணாரத்ன டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தமது சமூக வலைத்தள பக்கங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள லசித் மாலிங்க, திமுத் கருணாரத்னவிற்காக நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்குச் சகல விளையாட்டு ரசிகர்களும் ஒன்று கூட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இறுதி போட்டியில் திமுத் கருணாரத்ன சதத்தைப் பெறுவார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.