follow the truth

follow the truth

April, 3, 2025
Homeஉள்நாடுஹிஷாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று

ஹிஷாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று

Published on

ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த ஹிசாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

ஹட்டன் – டயகம மேற்கில் உள்ள மயானத்தில் அவரது சரீரம் புதைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று அவரது சரீரம் தோண்டி எடுக்கப்பட்டது.

நுவரெலியா நீதவானின் பிரசன்னத்துடன், ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழுவின் முன்னிலையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் சரீரம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில், இன்றைய தினம் அவ்வைத்தியசாலையில் இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து...

இளம் பெண்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப்படுத்திய ஒருவர் கைது

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை...

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள்...