follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1தேயிலை ஏற்றுமதி செய்து ஈரானின் கடனை அடைக்கும் இலங்கை

தேயிலை ஏற்றுமதி செய்து ஈரானின் கடனை அடைக்கும் இலங்கை

Published on

தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை இலங்கை அடைக்க உள்ளது. இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்காக ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்துவதற்காக இலங்கை ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்ய உள்ளது. இலங்கை அரசாங்கம், ஈரானுக்கு 250,925,169 டொலர்கள் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம், ஈரானிய தேசிய எரிபொருள் நிறுவனத்திற்கு இவ்வாறு கடன் செலுத்த வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் கடனுக்காக தேயிலையை ஏற்றுமதி செய்வது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை வெளிவிவகார அமைச்சில் நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...