ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று(31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முறை வெசாக் நிகழ்வை முன்னிட்டு 24வது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் பௌத்தாலோக வெசாக் வலயத்தை விமர்சையாக நடத்துவதற்கு அரச அனுரணையை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அதற்கு அமைவான முன்னேற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, பௌத்தாலோக வெசாக் வலயத்தை வெற்றிகரமாக நடத்த ஜனாதிபதி அலுவலகம் உட்பட அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான தலையீடு செய்யப்படும் என ஜனாதிபதி செயலாளர் இதன்போது தெரிவித்தார்.