follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகாணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்பு! (படங்கள்)

காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்பு! (படங்கள்)

Published on

பதுளையில் கடந்த 2 தினங்களாக காணாமல் போனதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த களன் தோட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பாமையை அடுத்து தேடப்பட்டு வந்த நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றபோது எடுத்து சென்ற புத்தகங்கள் மற்றும் உடமைகள் கஹட்டருப்ப பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பதுளை, தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியிலும் 13வயதான சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...