follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுபேருந்துக்கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை!

பேருந்துக்கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை!

Published on

இலங்கையில் பேருந்துக்கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவன சம்மேளனங்கள் ஆகியன இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளன.

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்துகளின் பயணங்களை மேற்கொள்வதற்கு பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்று இந்த அமைப்புக்கள் கோரியுள்ளன.

அந்தவகையில் ஆக்குறைந்த கட்டணத்தை 25 ரூபாவாக உயர்த்தவேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் ஏனைய கட்டணங்களை எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப 20 வீதத்தினால் அதிகரிக்கவேண்டும் என்று அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில்...

“ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது”

இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கியுள்ளதால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு இலங்கை தூதரகம்...