follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP2சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

Published on

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த தொடர் கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து சங்கக்கார எந்த தொழில்முறை லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை, எனவே இது முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் அவரது முதல் தொடராகும்.

இதேவேளை இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலியாவின் தலைவராக ஷேன் வாட்சனும், இங்கிலாந்து அணியின் தலைவராக இயோன் மோர்கனும், மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவராக பிரையன் லாராவும், தென்னாபிரிக்கா அணியின் தலைவராக ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மும்பை, ராய்ப்பூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

கடும் வெப்பம் – 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று(20) அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி...