follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுசிலிண்டர் வெடிப்புச் சம்பவம் : அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் : அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

Published on

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சற்று முன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் விசாரணைகள் கடந்த 11ஆம் திகதி நிறைவடைந்ததாகவும் அதன் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையே இவ்வாறு சமரப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர் தீ, வெடிப்புகள் மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்க நவம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ப்ரோப்பேன் அளவு 30 சதவீதமாகவும், பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட, சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று(20) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம்

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர...

ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (02) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த...

டெங்கு ஒழிப்புக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் Andres Marcelo Gonzales Gorrido ஆகியோர் இன்று...