follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுபேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை

பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை

Published on

கண்டியில் பேருந்துக்காக காத்திருந்த இளம் யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போகம்பரை தொலைதூர பேருந்து நிலையத்தில் நின்ற 23 வயதுடைய யுவதியை சாரதி மற்றும் நடத்துனர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த யுவதி செல்லும் இடத்திற்கு பேருந்து செல்வதாக கூறி, கடத்தி செல்லப்பட்டுள்ளார். கொழும்பு – கண்டி தனியார் பேருந்திற்குள் ஏற்றி கண்டி நீதிமன்ற வழாகத்திற்கு அழைத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரும் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோரை இழந்த குறித்த யுவதி வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.

இறுதியாக பணியாற்றிய வீட்டில் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறி அவர் அந்த வீட்டில் இருந்து இரகசியமாக வெளியேறியுள்ளார்.

அங்கிருந்து தப்பியவர் நுவரெலியாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும் போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம்

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர...

ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (02) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த...

டெங்கு ஒழிப்புக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் Andres Marcelo Gonzales Gorrido ஆகியோர் இன்று...