follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்இலங்கைக்கான புதிய தூதுவராக ஜூலி சுங் நியமனம்!

இலங்கைக்கான புதிய தூதுவராக ஜூலி சுங் நியமனம்!

Published on

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜூலி சுங் அமெரிக்க செனட்டினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இலங்கைக்கான அடுத்த தூதுவராக வெளிவிவகார சேவைகள் பெண் இராஜதந்திரி ஜூலி சுங்கை ஜூன் மாதம் நியமித்திருந்தார்.

எவ்வாறாயினும், தூதுவர் பதவியை பொறுப்பேற்கும் முன்னர் ஜூலி ஜியோன் சுங்கின் நியமனத்தை செனட் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இந்நிலையில், அவரின் நியமனம் செனட்டினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.

கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மாற்றம் ஒருங்கிணைப்பாளருக்கான தலைமைப் பணியாளராகவும் இருந்தார். கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.

கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை கலைப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரப் பள்ளியில் முதுகலைப் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

செயலாளரின் சிறப்புமிக்க கௌரவ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

அக்டோபரில் நடந்த காங்கிரஸின் செனட் சபை அமர்வின் போது, ​​இலங்கை இந்தியப் பெருங்கடலின் மையத்தில் ஒரு மூலோபாய இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய கடல்வழிப் பாதைகள் மற்றும் வர்த்தகப் பாதைகளை அணுகக்கூடிய அதன் முக்கியமான துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.

“இது சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் இலங்கை மக்கள் உட்பட இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா வலுப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...