follow the truth

follow the truth

October, 2, 2024
HomeTOP1எரிபொருள் விலையை அதிகரிக்க நிதி அமைச்சரிடம் கோரிக்கை!

எரிபொருள் விலையை அதிகரிக்க நிதி அமைச்சரிடம் கோரிக்கை!

Published on

இலங்கையில் எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் கடிதம் மூலம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலரை பயன்படுத்தினால், அந்நிய செலாவணி இல்லாமல் பெரும் நெருக்கடியை நாடு சந்திக்க நேரிடும் என நிதி அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலை 35 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலை 24 ரூபாவாலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 11 ரூபாவாலும் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் தேவையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மத்திய வங்கி ஆளுநரின் இந்தக் கடிதத்திற்கு நிதி அமைச்சு இதுவரை எவ்வித  பதிலையும் வழங்கவில்லை என தெரியவருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக ரொஷான் ரணசிங்க

திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க...

“LECO வாகனங்களை தேர்தல் பணிகளுக்காக எடுக்கவில்லை, எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம்...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...