follow the truth

follow the truth

April, 21, 2025
Homeவிளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து கலந்துரையாடல்

டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து கலந்துரையாடல்

Published on

டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் அடிக்கடி தொடர்களில் விளையாடும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித் தலைவர் மைக் பெய்ர்ட் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் ரிச்சர்ட் ஆகியோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த திட்டம் ஏற்கப்படும் பட்சத்தில், தற்போது வரை திட்டமிடப்பட்டு இருக்கும் கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெறும் வரை இது செயற்படுத்தப்படமாட்டாது.

இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதே போன்றதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன

இத்தகைய திட்டம், அநீதியை ஏற்படுத்தும் என ஒரு சில நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் முறையிட்டதால், இந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...