follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்ஒமிக்ரோன் பரவல் - நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு

ஒமிக்ரோன் பரவல் – நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு

Published on

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெதர்லாந்தில் நாளை முதல் முழு ஊரடங்கு விதித்து அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகள் ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்த் நாட்டிலும் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஜனவரி 14 வரை மூடப்படும் என்றும், பள்ளிகள் குறைந்தபட்சம் ஜனவரி 9 ஆம் திகதி வரை மூடப்படும் என்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...