follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP2"பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுங்க.. அதுபோதும்"

“பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுங்க.. அதுபோதும்”

Published on

தற்போதைய அரசாங்கத்தால், பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“..மக்கள் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்துள்ளனர். இந்தநிலையில், அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்போது செய்வதாகக் கூறுவது போல, சிறிய கார்களிலோ அல்லது பேருந்துகளிலோ பயணிப்பதில் தமக்கு பிரச்சினையில்லை.

எனினும் அதனைவிட, அரசாங்கம் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே முக்கியமானது.

நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும்..” என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும்,...

முட்டை விலையில் வீழ்ச்சி – 23 முதல் 29 ரூபாய் வரை விற்பனை

தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 23 ரூபாய் முதல்...

மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கைகளில் எந்த...