follow the truth

follow the truth

April, 25, 2025
HomeTOP2ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இறப்பார்கள்.. புத்தாண்டில் உலக மக்கள் தொகை குறித்த அறிக்கை

ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இறப்பார்கள்.. புத்தாண்டில் உலக மக்கள் தொகை குறித்த அறிக்கை

Published on

உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) 8.09 பில்லியனாக (809 கோடியாக) இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று (30) வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் (7 கோடி) உயர்ந்துள்ளது . 2023 ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் இந்த வருடம் (2024) மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது.

மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை புத்தாண்டு தினத்தில் அமெரிக்க மக்கள் தொகை 341 மில்லியனாக இருக்கும். ஜனவரி 2025 இல் இருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும்.

வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையில் கலந்து கொள்ள விஜித ஹேரத் வத்திக்கான் பயணம்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்வார் என...

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின்...

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத் தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் நியூஜெர்சியின் கொளுத்தும் வெயில் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காற்றின் வேகம் காரணமாக...