follow the truth

follow the truth

April, 24, 2025
HomeTOP2புதிய பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு இதுவரை வாகனங்களை ஒதுக்கப்படவில்லையாம்...

புதிய பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு இதுவரை வாகனங்களை ஒதுக்கப்படவில்லையாம்…

Published on

புதிய பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை.

அரசாங்கம் தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

“… புதிய பாராளுமன்றத்தில் கடமையாற்றும் எம்.பி.க்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும், அவர்களுக்கு வாகனங்களை எப்போது ஒதுக்குவது என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள வாகனங்களையும் இறக்குமதி செய்ய மாட்டோம்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை குறைக்க புதிய அரசு முடிவு செய்துள்ளது. வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது..” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். கோட்டேயில் உள்ள...

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள்...

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து...