follow the truth

follow the truth

April, 22, 2025
Homeவிளையாட்டுஇந்தியில் தான் பேசுவாரா? ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள்

இந்தியில் தான் பேசுவாரா? ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள்

Published on

பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.

அவரது ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய ஊடங்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பேட்டி அளித்த ஜடேஜா முழுவதுமாக ஹிந்தியில் பேசியுள்ளார். இதனையடுத்து ஜடேஜா ஆங்கிலத்தில் பேசவில்லை என ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து உள்ளனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டது பெரும்பாலான இந்திய ஊடகங்கள் மட்டுமே. இதனால் ஜடேஜா இந்தியில் பேசினார்.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை கிளப்பவே எப்போதும் முயற்சி செய்கின்றன என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய செய்தியாளர் சுபயன் சக்ரவர்த்தி கூறினார்.

அஸ்வின் ஓய்வை அறிவிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் அந்த தகவல் தனக்கு தெரியும் என்று நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...