follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடு3 வெளிநாட்டுத் தூதரகங்களை மூட தீர்மானம் - ஜி.எல்.பீரிஸ்

3 வெளிநாட்டுத் தூதரகங்களை மூட தீர்மானம் – ஜி.எல்.பீரிஸ்

Published on

செலவீனங்களைக் குறைப்பதற்கும் தேவையான அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கை மூன்று வெளிநாட்டுத் தூதரகங்களை மூடவுள்ளதாகவும் , அதற்கமைய ஜேர்மன் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகங்களை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அலுவலகங்களை நிர்வகிக்க ஏற்படும் செலவீனங்களை குறைப்பதற்காகவே, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரு துணைத் தூதரகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நைஜீரியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்குள்ள தூதரகத்தை மூட தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜேர்மன் பிராங்பேர்ட்டில் உள்ள துணைத் தூதரகத்தின் செயற்பாடுகள் பேர்லினுக்கு மாற்றப்படும் என்று வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் 2ம் கட்டம் விரைவில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள்...

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்க தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (01) நள்ளிரவு முதல் இந்தக் கட்டணங்கள் 4 வீதத்தால்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத்...