follow the truth

follow the truth

April, 14, 2025
HomeTOP2இந்தியாவிலிருந்து 440 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

இந்தியாவிலிருந்து 440 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

Published on

கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுங்கப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொடக இதனைத் தெரிவித்தார்.

17 இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் சுமார் 440 மெற்றிக் தொன்கள் அரிசி உள்ளதாகவும் அதில் 130 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 300 மெற்றிக் தொன் புழுங்கல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த அரிசியை சுங்கத்தில் இருந்து விரைவில் அகற்றி பொதுமக்களுக்கு வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை சுங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுங்கப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொடக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கதிர்காமம் தேவாலயத்திற்கு செல்வோருக்கான விசேட அறிவிப்பு

கதிர்காமம் தேவாலயத்திற்கு செல்வோருக்கான விசேட அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதரகம விகாரையை இன்று (13) மாலை 6...

இரு நாட்களில் உச்சம் தொட்ட அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய்

கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் 100 மில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக அதிவேக...

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது...