follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉலகம்400 பில்லியன் டொலர் சொத்துக்களை சேகரித்த முதல் நபர் எலான் மஸ்க்

400 பில்லியன் டொலர் சொத்துக்களை சேகரித்த முதல் நபர் எலான் மஸ்க்

Published on

உலகின் 400 பில்லியன் டாலரைத் தாண்டிய உலகின் முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸின் சமீபத்திய இன்சைடர் பங்கு விற்பனை மற்றும் டெஸ்லா பங்குகளின் உயர்வு காரணமாக எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், ஸ்பேஸ் எக்ஸ்-ன் மொத்த மதிப்பீடு தோராயமாக 350 பில்லியன் டாலர்கள் ஆக உள்ளது.

இந்த மதிப்பீடு உலகின் மிகவும் மதிப்புமிக்க தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் இன் நிலையை வலுப்படுத்துகிறது. மேலும், அவரது சொத்து மதிப்பை செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ் ஏஐ- யும் அதன் மதிப்பீட்டை அதிகரித்துள்ளது.

உலக வரலாற்றில் யாரும் தொட்டிராத சொத்து மதிப்பை கடந்த மாத இறுதியில் எலான் மஸ்க் தொட்டு இருந்தார். ரூ.29 லட்சம் கோடியாக எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்த நிலையில், தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அமெரிக்க மதிப்பில் சுமார் 400 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...

காஸா மக்கள் வசிக்கும் கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேலிய பிணை கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காஸா மீது...

கொலம்பியாவில் நாடு தழுவிய சுகாதார அவசரநிலை பிரகடனம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை...