follow the truth

follow the truth

April, 27, 2025
HomeTOP2போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் தாக்கும் - இஸ்ரேல் பிரதமர்

போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் தாக்கும் – இஸ்ரேல் பிரதமர்

Published on

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காசாவில் தற்போதைக்கு போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

போர் தொடங்கி கிட்டத்தட்ட 14 மாதங்கள் நிறைவுற்ற நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “நாங்கள் இப்போது போரை நிறுத்தினால், ஹமாஸ் மீண்டும் வந்து தாக்கலாம் – இது நடப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என்று கூறினார்.

எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க “ஹமாஸ்-ஐ அழித்தொழித்தல், அதன் இராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை ஒழித்தல்” என்ற இலக்கை நிர்ணயித்து இருப்பதாக நெதன்யாகு மீண்டும் கூறினார். எனினும், இந்த இலக்கை நாங்கள் இன்னும் முழுமையாக அடையவில்லை என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த ஒக்டோபர் 23ம் திகதி கூறும் போது, “இஸ்ரேல் ஹமாஸ் இனது இராணுவத் திறனை சிதைக்க முடிந்தது. அதன் தலைமையை அடுத்தடுத்து கொன்று குவித்தது. அந்த வெற்றிகளுடன், பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அடுத்து என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது” என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...