follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்தன் சொந்த நாட்டை மீட்டு வரும் சிரிய நாட்டவர்கள்

தன் சொந்த நாட்டை மீட்டு வரும் சிரிய நாட்டவர்கள்

Published on

தெற்கு சிரியாவின் டெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளை “சிரியா” போராட்ட குழுவினர் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசுப் படைகளுடன் நடந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பிறகு உள்ளூர் கிளர்ச்சிக் குழுவினர் பல்வேறு ராணுவ தளங்களைப் கைப்பற்றிவிட்டதாக பிரிட்டனை சேர்ந்த போர் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு வடக்கு சிரியாவில் உள்ள “சிரியா” போராட்ட குழுவினர் அரசுக்கு எதிராக திடீர்த் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையிலான, கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

“சிரியா” போராட்ட குழுவினர்களின் தாக்குதலைத் தொடர்ந்து, குறைந்தபட்சம் 3,70,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல், ஏற்கெனவே மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் வடக்கு சிரிய மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமாக்குவதாக ஐ.நா கூறியுள்ளது.

தாக்குதல் நடைபெறும் நகரங்களில் முக்கியப் பகுதிகளில் வசிக்கும் சில மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர முடியாமல் தவிக்கின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு துவங்கப்பட்ட இந்தத் தாக்குதலில் 111 பொதுமக்கள் உள்பட 820 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது பிரிட்டனை சேர்ந்த எஸ்.ஓ.ஹெச்.ஆர் போர் கண்காணிப்புக் குழு.

ஹோம்ஸ் நகரின் வடக்கில் அமைந்துள்ள ஹமா பகுதியை டிசம்பர் 5ஆம் திகதி  “சிரியா” போராட்ட குழுவினர்கள் கைப்பற்றினர். கடந்த வாரம் அலெப்போ நகரை இழந்த அதிபர் அசாத்திற்கு, இது இரண்டாவது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 10 வரை விமான சேவை இரத்து

இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து செய்வதாக...

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்...

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும்...