follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமருத்துவர் ஷாபிக்கு நிலுவை சம்பளத்தை செலுத்துமாறு உத்தரவு

மருத்துவர் ஷாபிக்கு நிலுவை சம்பளத்தை செலுத்துமாறு உத்தரவு

Published on

பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகபேறு மருத்துவப் பிரிவின் மருத்துவர் ஷாபி சஹாப்தீனுக்கு  செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி சானக அபேவிக்ரமதெரிவித்துள்ளார்.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் சேவையில் இருந்து நீக்கப்படவில்லை என்பதுடன் அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பபட்டுள்ளார்.

இதன் காரணமாக சம்பள நிலுவையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவர் ஷாபி சிஹாப்தீன்,  பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார் என்ற  சர்ச்சைக்குரிய செய்தியை சிங்கள பத்திரிகை ஒன்று கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதலில் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து சில தினங்களில் குற்றவியல் விசாரணை திணைக்களம் அவரை கைது செய்தது.

விசாரணைகளை நடத்திய குற்றவியல் விசாரணை திணைக்களம், மருத்துவர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனால், கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி மருத்துவர் ஷாபி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...