follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் மாநாடு திங்கட்கிழமை

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் மாநாடு திங்கட்கிழமை

Published on

அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல முற்போக்கு சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மாநாடு டிசம்பர் 20 ம் திகதி அன்று ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நிகழ்வு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த பிரதிநிதிகள் மாநாட்டின் தொனிப்பொருளானது,சீரழிந்த தாயகத்தைக் கட்டியெழுப்புகின்ற தீர்வு என்பதுடன், நாட்டின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கு பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் தேசிய நிறைவேற்று சபையின் நியமனத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதாகும்.

மனிதநேயம், சமூக நீதி, சுற்றுச்சூழல் நட்பு, பொருளாதார நிலைத்தன்மை, இலங்கையின் நாகரிகம் மற்றும் கலாச்சாரம், பொதுப் பங்களிப்பு உகந்த வள பயன்பாடு மற்றும் பொருளாதார ஜனநாயகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஜனநாயகம், பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக மற்றும் சமூக ரீதியாக சீரழிந்த இலங்கையின் மறுசீரமைப்புக்கான தொடர்மற்றும் இந்த மாநாட்டில் அரசியல் முன்மொழிவுகளும் வெளியிடப்படும்.

அரசின் கடனை செலுத்துதல், பொருளாதார வலுவூட்டல், மனித வள மேம்பாடு, உற்பத்தி நிறுவன கட்டமைப்புகள், மோசடி, ஊழல் மற்றும் கழிவு ஒழிப்பு, புதிய வளர்ச்சி திட்டங்கள், கலாச்சாரம், கலை மற்றும் பொழுதுபோக்கு, சமூக மேம்பாடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் உட்பட அனைத்து துறைகளையும் உள்ளடக்கி செயற்படுத்த மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலவும் கொவிட் தொற்றுநோய் சூழ்நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்பட உள்ளது.

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...