follow the truth

follow the truth

April, 11, 2025
HomeTOP1வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை - ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை – ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

Published on

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களின் ஊடாக தங்களது வருமானச் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு குறித்த தினத்தின் நள்ளிரவு 12.00 மணிக்குள் வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய அறிக்கைகளை ஒப்படைக்காமல் இருப்பது தேர்தல் நடைமுறைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...