follow the truth

follow the truth

April, 29, 2025
Homeஉலகம்போர் நிறுத்தம் தொடங்கிய போதும் லெபனான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்

போர் நிறுத்தம் தொடங்கிய போதும் லெபனான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்

Published on

ராக்கெட் சேமிப்பு கிடங்கு ஒன்றில் ஹிஸ்புல்லா நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதால் தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அறிவித்த ஒரு நாளுக்கு பிறகு இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், அவர்கள் எந்த தகவலும் வழங்கவில்லை என்று கூறியது. இது குறித்து லெபனான் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் இந்த தாக்குதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி இரண்டு மாத போர்நிறுத்த காலத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் லிட்டானி ஆற்றின் வடக்கே திரும்பப் பெற வேண்டும் மற்றும் இஸ்ரேலிய படைகள் தங்கள் பக்கம் திரும்ப வேண்டும். எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் லெபனான் துருப்புக்கள் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் ரோந்து செல்வர்.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்தத்தின் இரண்டாவது நாளில், எல்லைக்கு அருகில் உள்ள மார்கபாவில் பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லெபனான் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...