follow the truth

follow the truth

April, 23, 2025
Homeவிளையாட்டுஊக்கத்தொகை தருகிறோம் ஐசிசி திட்டம் சாத்தியப்படுமா?

ஊக்கத்தொகை தருகிறோம் ஐசிசி திட்டம் சாத்தியப்படுமா?

Published on

ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது.

பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல், அதாவது பாகிஸ்தானிலும் மற்றொரு நாட்டிலும் போட்டியை நடத்தினால் நாங்கள் பங்கேற்போம் (மற்றொரு நாட்டில் நடைபெறும் போட்டிகளில் மட்டும்) என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கூறி வந்தது.

ஆனால் எங்கள் நாட்டில்தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்தது. அத்துடன் தொடருக்கான வரைவு அட்டவணையை வெளியிட்டது. இதனால் பாகிஸதானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என இந்திய அணி, தனது முடிவை ஐ.சி.சி.க்கு கடிதம் மூலம் தெரிவித்தது.

இதனால் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டி அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவேளை போட்டி பாகிஸ்தானிலேயே நடைபெற்று இந்தியா பங்கேற்கவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் ஐசிசி-க்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்படும். சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்த இழப்பு இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், போட்டியை ஹைபிரிட் மாடலாக நடத்த ஐ.சி.சி. புதிய வழியை கண்டுள்ளது.

அதாவது போட்டியை நடத்தும் பாகிஸ்தானுக்கு ஊக்கத்தொகை வழங்க முன்வந்துள்ளது. தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்துங்கள். நாங்கள் உங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறோம் என ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் இது தொடர்பாக முடிவு எடுத்ததாக எனத் தெரியவில்லை. நாளை மறுதினம் போட்டி அட்டவணையை உறுதி செய்ய ஐசிசி- பிசிபி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறது. அப்போது ஹைபிரிட் மாடல் குறித்து முடிவு எடுக்கப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...