follow the truth

follow the truth

April, 29, 2025
Homeஉலகம்இம்ரான் கானை விடுவிக்கக் கோரி போராட்டம் - இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பதற்றம்

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி போராட்டம் – இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பதற்றம்

Published on

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அந்த நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக செல்கின்றமையினால் அங்கே உச்சக்கட்ட பதற்றம் நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த போராட்டத்தை தடுக்கும் முயற்சியில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. சில பகுதிகளில் தொலைபேசி சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான், தற்போது ஊழல் குற்றச்சாட்டிற்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...