follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1ஓய்வூதிய வயதை அதிகரித்ததுக்கு இ.நி.சே.சங்கம் எதிர்ப்பு

ஓய்வூதிய வயதை அதிகரித்ததுக்கு இ.நி.சே.சங்கம் எதிர்ப்பு

Published on

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்ப்பதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நிதியமைச்சின் அதிகாரிகள் தமது தொழிற்சங்கங்களுடனோ அல்லது வேறு எந்த அரச சேவை சங்கங்களுடனோ கலந்தாலோசிக்கவில்லை என அதன் தலைவர் ரோஹன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஓய்வுபெறும் வயதை 62 ஆக குறைக்குமாறு தமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் டி சில்வா தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...