follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்ஹெலிகொப்டர் விபத்து : குரூப் கேப்டன் வருண் சிங்கும் உயிரிழப்பு

ஹெலிகொப்டர் விபத்து : குரூப் கேப்டன் வருண் சிங்கும் உயிரிழப்பு

Published on

அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தகவலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் குன்னூர் அருகே கடந்த கடந்த 8ம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டரில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து ஹெலிகொப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...