follow the truth

follow the truth

April, 29, 2025
Homeஉலகம்வெள்ளை மாளிகைக்கு செய்தி தொடர்பாளராக 27 வயது பெண்ணை நியமித்த ட்ரம்ப்

வெள்ளை மாளிகைக்கு செய்தி தொடர்பாளராக 27 வயது பெண்ணை நியமித்த ட்ரம்ப்

Published on

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஜனவரி மாதம் 20ம் திகதி பதவியேற்கிறார். அவர் தற்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் என்ற 27 வயது பெண்ணை நியமனம் செய்துள்ளார். இவர் டிரம்பின் பிரசார உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, கரோலின் லீவிட் மேடையில் சிறந்து விளங்குவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம் என்ற செய்தியை மக்களுக்கு வழங்க உதவுவார் என்றார். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியை வகிக்கும் இளம் வயது நபர் கரோலின் லீவிட் ஆவார். இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு 29 வயதான ரான் ஜீக்லர் நியமிக்கப்பட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...