follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉலகம்பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்?

பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்?

Published on

கடந்த 1963ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்துக்குள் புகுந்த இராணுவ வீரர்கள் சிலர்  அமைச்சர் ஒருவர் உட்பட அதிகாரிகள் பலரை சுட்டுக்கொலை செய்தனர்.

அதன் பின்னர் அந்நாட்டுப் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்கள் இருப்பதாக கட்டுக்கதைகள் எழுந்தன. இதனால் சில பிரதமர்கள் அங்கு  தங்குவதை தவிர்த்து வந்தனர்.

குறிப்பாக கடந்த 8 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே மற்றும் அவருக்கு பின் ஓராண்டு மட்டும் பிரதமர் பதவி வகித்த யோஷிஹைட் சுகா ஆகிய இருவருமே பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்த்தனர்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடோவிடம் பலரும் பிரதமரின் உத்தியோக இல்லத்தில் தங்குவதை தவிர்க்கும்படி கூறினர்.

ஆனால் அதையும் மீறி புமியோ கிஷிடோ அண்மையில்  பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்துக்கு குடி பெயர்ந்தார்.

இந்நிலையில் அங்கு முதல் நாளை எப்படி கழித்தீர்கள் ?என பிரதமரிடம்  நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு  “நேற்று, இரவு நான் நன்றாக தூங்கினேன். இதுவரை அந்த மாளிகையில் பேய், பிசாசை நான் பார்க்கவில்லை” என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை

உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில்...

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்...

டிரம்ப் மற்றும் நெதன்யாகு சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு ஒன்று...