follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஇறக்குமதிக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

இறக்குமதிக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

Published on

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (13) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கான பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் நெருக்கடியை தவிர்க்க இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையில், நாட்டில் நீண்டகாலமாக நிலவும் டொலர் தட்டுப்பாடு குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...